சாயாவனேஸ்வரர் கோவில், திருசாய்க்காடு (சாயாவனம்)
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருசாய்க்காடு (சாயாவனம்) |
| இறைவன் பெயர் | சாயாவனேஸ்வரர் |
| இறைவி பெயர் | குயிலினும் நன்மொழியம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 2 |
| எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து பூம்புகார் சென்று அங்கிருந்து சிறிது தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். |
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி யானை ஏற முடியாத ஒரு கட்டுமலையின் மேல் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே இறைவியின் சந்நிதியும் உள்ளது. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் வில்லேந்தி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி அளிக்கிறார். காலில் சிவபெருமான் கொடுத்த வீரகண்டமனியை அணிந்திருக்கிறார். சிக்கலில் அம்பாள் எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று சிவபெருமான் கொடுத்த இந்த வீரகண்டமனியும் எதிரிகளை அழிக்க பயன்பட்டது.
63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலம் இதுவாகும்.