காசி விஸ்வநாதர் கோவில், திருக்குடந்தைக் காரோணம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்குடந்தைக் காரோணம் |
| இறைவன் பெயர் | காசி விஸ்வநாதர் |
| இறைவி பெயர் | விசாலாட்சி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது. |
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி ஒற்றைக்கண் கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கிற் காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே. முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும் படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக் கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங் கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே. மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கின் முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார் கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கின் மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார் காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே. பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடி போற்றக் கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே. மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே அனல்வாளி கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில் தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள் நலியாமைக் காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே. ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல் வாழ்க்கை மானார்தோலார் புலியினுடையார் கரியினுரி போர்வை தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கிற் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே. வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்ப மலைசேரும் விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும் உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாருங் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே. கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய் அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார் தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கிற் கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே. நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ் சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக் கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே. கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ் சம்பந்தன் உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.