Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சற்குண நாதேஸ்வரர்
இறைவி பெயர்சர்வாங்க சுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவீழிமிழிலை என்ற தலத்திற்கு மேற்கில் 6 கி.மி. தொலைவில் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. திருவன்னியூர் அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம்.நாச்சியார் கோயில் என்ற திவ்யதேசம் தலத்திற்கு கிழக்கே ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது.

திருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் 
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் 
கட்டிட் டவினை போகக் கருவிலிக் 
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.  

ஞால மல்கு மனிதர்காள் நாடொறும் 
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் 
கால னார்வரு தன்முன் கருவிலிக் 
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 

பங்க மாயின பேசப் பறைந்துநீர் 
மங்கு மாநினை யாதே மலர்கொடு 
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் 
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.  

வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் 
வேட னாய்விச யற்கருள் செய்தவெண் 
காட னாருறை கின்ற கருவிலிக் 
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 

உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர் 
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் 
கையி னானுறை கின்ற கருவிலிக் 
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 

ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர் 
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி 
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் 
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.  

நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் 
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் 
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் 
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.  
 
பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா 
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர 
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் 
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.  
 
நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் 
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே 
கம்ப னாருறை கின்ற கருவிலிக் 
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.  

பாரு ளீரிது கேண்மின் பருவரை 
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் 
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் 
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.