ராமலிங்கேஸ்வரர் கோவில், ராமனதீச்சுரம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | ராமனதீச்சுரம் |
| இறைவன் பெயர் | ராமலிங்கேஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராம்நந்தீஸ்வரர் |
| இறைவி பெயர் | கருவார்குழலி அம்மை, சூடிகாம்பாள், சரிவார்குழலி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து 1 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. |
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் இயற்றியுள்ள 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் 11-வது பாடல் சிதைந்து போயிற்று.
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன தீச்சுரமே. சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் தாதையோதான் அந்தமில் பாடலோன் அழகன்நல்ல எந்தவன் இராமன தீச்சுரமே. தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொதி சடையவன் மன்னுகாதிற் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சுரமே. சத்தியு ளாதியோர் தையல்பங்கன் முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினில் அழகுசூலம் வைத்தவன் இராமன தீச்சுரமே. தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே. சரிகுழல் இலங்கிய தையல்காணும் பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவன் ஆடலோன் அங்கையேந்தும் எரியவன் இராமன தீச்சுரமே. மாறிலா மாதொரு பங்கன்மேனி நீறது ஆடலோன் நீள்சடைமேல் ஆறது சூடுவான் அழகன்விடை ஏறவன் இராமன தீச்சுரமே. தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன் படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலான் நான்மறைக்கும் இடமவன் இராமன தீச்சுரமே. தனமணி தையல்தன் பாகன்றன்னை அனமணி அயன்அணி முடியுங்காணான் பனமணி அரவரி பாதங்காணான் இனமணி இராமன தீச்சுரமே. தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் அறிவோரால் நாமம் அறிந்துரைமின் மறிகையோன் தன்முடி மணியார்கங்கை எறிபவன் இராமன தீச்சுரமே. 11-வது பாடல் சிதைந்து போயிற்று.