இந்த பதிகப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கீழைவழி, பழையாறு, மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டு மிழலை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கிழையம் (இன்றைய நாளில் கீழையகம், கீழகரம் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | ஆதிபுரீஸ்வரர், பிராகிருகேஸ்வரர் |
| இறைவி பெயர் | சௌந்தர்யநாயகி |
| பதிகம் | சுந்தரர் (7-12-5) |
| எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து அச்சுதமங்கலம் செல்லும் சாலை வழியில் நன்னிலத்தில் இருந்து மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவிலும், ஶ்ரீவாஞ்சியத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 3 கி. மீ. தொலைவிலும் கீழையகம் உள்ளது |
| ஆலய முகவரி |
அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் கீழயகரம், (கீழையகம்) ஶ்ரீவாஞ்சியம் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN - 610110 இவ்வாலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். |
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகம் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
குழலை வென்ற மொழிமட வாளைஓர் கூறனாம் மழலை யேற்று மணாளன் இடம்தட மால்வரைக் கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் மிழலை நாட்டு மிழலை வெண்ணி நாட்டு மிழலையே. பொழிப்புரை : குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய, இளமையான இடபத்தையுடைய அழகனும், பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள், கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டிலுள்ள மிழலை என்பவை