தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பாம்பணி, தஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தஞ்சை (இன்றைய நாளில் கீழைத்தஞ்சாவூர் என்று பெயர்)
இறைவன் பெயர்திருமூலநாதர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்சுந்தரர் (7-12-9)
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி, திருப்பயத்தங்குடி வழியாக திருமருகல் செல்லும் சாலையில் திருபயத்தங்குடியில் இருந்து கிழக்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் கீழைத்தஞ்சாவூர் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில்
கீழைத்தஞ்சாவூர்
கீழைத்தஞ்சாவூர் அஞ்சல்
வழி திருப்பயத்தங்குடி
வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610101

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்,
தஞ்சை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


தழலு மேனியன் தையல் ஓர் பாகம் அமர்ந்தவன்
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம்
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

பொழிப்புரை :

தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும், மங்கையை ஒரு பங்கில் 
விரும்பி வைத்துள்ளவனும், தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை 
அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் 
ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் - சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, 
பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை என்பவை
 thanjai map

திருபயத்தங்குடி பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கீழைத்தஞ்சாவூர் (தஞ்சை) இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps

இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை நாயனாரின் அவதாரத் தலம். இத்தல இறைவன் திருமூலநாதர் என்றாலும் இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை செருத்துணை நாயனார் கோவில் என்றே அழைக்கின்றனர்.