தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள பேரூர், தக்களூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தஞ்சை தளிக்குளம்
இறைவன் பெயர்தளிக்குளநாதர்
இறைவி பெயர்
பதிகம்அப்பர் (6-51-8)
எப்படிப் போவது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை பூங்காவின் உள்ளே ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவிலுள்ள பெரிய மேட்டின் மீது இந்த வைப்புத் தலக் கோவில் உள்ளது. குளத்தின் மையத்திலுள்ள இந்த இடத்திற்கு படகு மூலமோ அல்லது இழுவை இயத்திர ரயில் மூலமோ (winch) செல்லலாம்.
ஆலய முகவரி அருள்மிகு தளிக்குளநாதர் திருக்கோவில்
சிவகங்கை பூங்கா
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 622101
தஞ்சை தளிக்குளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.


அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற்று உள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்
சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்
நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே.

பொழிப்புரை :
பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் 
நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து 
என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், 
தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, 
நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
தஞ்சை தளிக்குளம் தளிக்குளநாதர் ஆலயம் புகைப்படங்கள்
குளத்தின் நடுவில் ஆலயம் குளத்தின் நடுவில் ஆலயம் - மற்றொரு தோற்றம் ஆலயத்தின் அருகாமைத் தோற்றம்