ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவேடகம் |
| இறைவன் பெயர் | ஏடகநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஏலவார்குழலி, மாதேவியம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 Km தொலைவில் உள்ளது. |
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
புகைப்படங்களைப் பார்க்க கீழே உள்ள எண்களின் மேல் கிளிக் செய்யவும்.

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் நுழைவு இராஜகோபுரம்
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதி கோபுரம்"
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் -சுவாமி சந்நிதி முன் கொடிமரம், நந்தி".
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - ஏலவார்குழலி அம்மன் சந்நிதி
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - ஏலவார்குழலி அம்மன் சந்நிதி மற்றொரு தோற்றம்
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - அம்பாள் சந்நிதி முன் நந்தி
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - சப்த மாதாக்கள் சந்நிதி
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - வள்ளி தெய்வானையுடன் சண்முகர்

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - அம்பாள், சுவாமி சந்நிதி 2வது கோபுரம்
திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம் - கிழக்கு வெளிப் பிரகாரம்