நடு நாடு - கோவில்கள் பட்டியல் | ||
---|---|---|
# | சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் |
1 | திருநெல்வாயில் அரத்துறை | தீர்த்தபுரீஸ்வரர் |
2 | தூங்கானை மாடம்-பெண்ணாகடம் | சுடர்கொழுந்தீசர் |
3 | திருக்கூடலையாற்றுர் | நர்த்தன வல்லபேஸ்வரர் |
4 | திருஎருக்கத்தம்புலியூர் | திருநீலகண்டேஸ்வரர் |
5 | திருத்திணை நகர் | சிவக்கொழுந்தீசர் |
6 | திருச்சோபுரம் | சோபுரநாதர் |
7 | திருவதிகை | அதிகை வீரட்டநாதர் |
8 | திருநாவலூர் | திருநாவலேஸ்வரர் |
9 | திருமுதுகுன்றம் | பழமலைநாதர் |
10 | திருநெல்வெண்ணை | சொர்ணகடேஸ்வரர் |
11 | திருக்கோவிலூர் | வீரட்டேஸ்வரர் |
12 | திருஅறையணி நல்லூர் | அதுல்யநாதேஸ்வரர் |
13 | திருவிடையாறு | இடையாற்று நாதர் |
14 | திருவெண்ணை நல்லூர் | கிருபாபுரீஸ்வரர் |
15 | திருத்துறையூர் | சிஷ்டகுருநாதர் |
16 | வடுகூர் | பஞ்சநாதீஸ்வரர் |
17 | திருமாணிகுழி | வாமனபுரீஸ்வரர் |
18 | திருப்பாதிரிப்புலியூர் | பாடலீஸ்வரர் |
19 | திருமுண்டீச்சரம் | சிவலோக நாதர் |
20 | புறவர் பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
21 | திரு ஆமாத்தூர் | அழகிய நாதர் |
22 | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் |
23 | கிளியனூர் | அகத்தீஸ்வரர் |
நடு நாடு மாவட்டங்கள்
இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
விழுப்புரம் மாவட்டம் | திருநாவலூர், திருநெல்வெண்ணை, திருக்கோவிலூர், திருஅறையணிநல்லூர், திருவிடையாறு, திருவெண்ணைநல்லுர், திருத்துறையூர், திருமுண்டீச்சரம், புறவர் பனங்காட்டூர், திரு ஆமாத்தூர், கிளியனூர் |
கடலூர் மாவட்டம் | திருநெல்வாயில் அரத்துறை, தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலையாற்றுர், திருஎருக்கத்தம்புலியூர், திருத்திணை நகர், திருச்சோபுரம், திருவதிகை, திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருமுதுகுன்றம் |
திருவண்ணாமலை மாவட்டம் | திருவண்ணாமலை |
புதுச்சேரி மாநிலம் | வடுகூர் |
குறிப்பு:
தொண்டை நாட்டிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளன. அவைகளை தொண்டை நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் பட்டியலில் பார்க்க.
காவிரி நதியின் வடகரையிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவைகளை காவிரி வடகரைத் தலங்கள் பட்டியலில் பார்க்க.
சப்த விடங்க ஸ்தலங்கள்
புராணத்தின் படி, முசுகுந்தன் என்ற சோழ மன்னன் இந்திரனிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்று, இந்திரனால் வணங்கப்பட்ட தியாகராஜ சுவாமியின் உருவத்தைப் பெற விரும்பினான். மூல விக்கிரகம் திருவாரூரிலும், மற்ற ஆறு விக்கிரகங்கள் கீழ்க்கண்ட இடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன:
- திருவாரூர் - மூல விக்கிரகம்
- திருநல்லாறு
- நாகப்பட்டினம்
- திருக்காறாயில்
- திருக்கோளிலி
- திருவாய்மூர்
- திருமறைக்காடு
முக்கிய திருவிழாக்கள்
திருவிழா என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுவது. முக்கிய திருவிழாக்கள்:
- சிதம்பரம் - ஆருத்ரா தரிசனம் மற்றும் தேரோட்டம் ( மார்கழி பவுர்ணமி )
- உத்தர கோச மங்கை - ஆருத்ரா தரிசனம் ( மார்கழி )
- திருவாரூர் - ஆழி தேரோட்டம் ( மாசி )
- சிதம்பரம் - ஆனி திருமஞ்சனம் ( ஆனி )
- திருவண்ணாமலை - கார்த்திகை தீபம் ( கார்த்திகை )
- காளஹஸ்தி - மஹா சிவராத்திரி ( மாசி ) பிரம்மோற்சவம்
- மதுரை - ஆவணி மூல (புட்டு) திருவிழா ( ஆவணி )
- மதுரை - மார்கழி அஷ்டமி சப்பரம் ( மார்கழி )
- திருவையாறு - அப்பர் கயிலாய காட்சி ( ஆடி அமாவாசை )
- திருவஞ்சைக்களம் ( கேரளா) - சுந்தரர் கயிலாய காட்சி ( ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் )
- திருக்கழுகுகுன்றம் - லட்சதீப திருவிழா ( கன்னி லக்னத்தில் குரு பகவான் பிரவேசிக்கும் நாள் )
- கும்பகோணம் - மகாமக பெருவிழா ( மாசி )
*மேலே குறிப்பிட்டவற்றில் லட்ச தீப திருவிழா மற்றும் மகாமக பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். வருகின்ற 2028 இல் இந்த இரு திருவிழாக்களும் நடைபெறுகின்றது.